செய்திகள்

ஊத்துக்குளி அருகே டிப்பர் லாரி மோதி ரியல் எஸ்டேட் புரோக்கர் பலி

Published On 2019-06-07 11:30 GMT   |   Update On 2019-06-07 11:30 GMT
ஊத்துக்குளி அருகே டிப்பர் லாரி மோதி ரியல் எஸ்டேட் புரோக்கர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்கயம்:

காங்கயம் அருகே உள்ள ஊத்துக்குளி பிருந்தாவன் தோட்டத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (48). ரியல் எஸ்டேட் புரோக்கர்.

நேற்று இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருப்பூருக்கு வந்து விட்டு ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார். எஸ். பெரியபாளையத்தில் சென்ற போது எதிரே டிப்பர் லாரி வந்தது. இந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மகேந்திரன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். உடனே டிப்பர் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

இது குறித்து ஊத்துக்குளி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சவுந்தர பாண்டியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் பலியான மகேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News