செய்திகள்
பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக்குக -பிரதமருக்கு எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை
இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக மாற்ற, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:
புதிய கல்வி வரைவு கொள்கையில் மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை திருத்தம் செய்ததையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று, பிரதமர் மோடிக்கு தமிழ் மொழிக்காக கோரிக்கை ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் முதல்வர் பழனிச்சாமி குறிப்பிட்டிருப்பதாவது:
இந்தியாவின் பிற மாநிலங்களில் தமிழ் மொழியை விருப்ப மொழியாக மாற்ற வேண்டும். தமிழ் மொழியை விருப்பமொழியாக அறிவித்தால் உலகின் மிக தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழுக்கு சிறந்த சேவையாக அமையும் என மரியாதைக்குரிய பிரதமர் மோடியை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய கல்வி வரைவு கொள்கையில் மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை திருத்தம் செய்ததையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று, பிரதமர் மோடிக்கு தமிழ் மொழிக்காக கோரிக்கை ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் முதல்வர் பழனிச்சாமி குறிப்பிட்டிருப்பதாவது:
இந்தியாவின் பிற மாநிலங்களில் தமிழ் மொழியை விருப்ப மொழியாக மாற்ற வேண்டும். தமிழ் மொழியை விருப்பமொழியாக அறிவித்தால் உலகின் மிக தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழுக்கு சிறந்த சேவையாக அமையும் என மரியாதைக்குரிய பிரதமர் மோடியை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.