செய்திகள்

பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும்- கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்

Published On 2019-06-04 09:56 GMT   |   Update On 2019-06-04 09:56 GMT
ஆன்லைனில் விளையாடும் பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் முஸ்தபா, சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறி இருப்பதாவது:-

“பப்ஜி” எனும் ஆன்லைன் விளையாட்டில் புதிய பதிப்பில் இஸ்லாமியர்களின் புனித தலமான “காஃபாவை” போன்ற மாதிரி வடிவத்தை உருவாக்கி இழிவுபடுத்தி உள்ளனர். இது இஸ்லாமியர்களை கொந்தளிக்க செய்து உள்ளது. எனவே “பப்ஜி” விளையாட்டை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News