செய்திகள்

நாசரேத் அருகே தாய்-மகள் மீது தாக்குதல்

Published On 2019-06-01 16:22 GMT   |   Update On 2019-06-01 16:22 GMT
நாசரேத் அருகே தோட்டத்தில் மாடு மேய்ந்த தகராறில் தாய்-மகள் மீது தாக்குதல் நடத்திய தந்தை மற்றும் மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாசரேத்:

நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரத்தை சேர்ந்தவர் சின்னத்துரை.  இவரது மனைவி ரேகா (வயது 43) இவர் வளர்த்து வந்த மாடு சம்பவத்தன்று நாசரேத் அருகே உள்ள வெள்ளரிக்காயூரணியை சேர்ந்த பூல்பாண்டி (55) என்பவரின் தோட்டத்தில் மேய்ந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் பூல்பாண்டி அந்த மாட்டை தனது வீட்டுக்கு கொண்டு வந்தார். இதனை அறிந்த ரேகா தனது மகள் ஜெனிபருடன் பூல்பாண்டி வீட்டுக்கு சென்று மாட்டை கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. 
இதில் ஆத்திரம் அடைந்த பூல்பாண்டி மற்றும் அவரின் மகன் குமார் (23) ஆகியோர் சேர்ந்து தாய் - மகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து நாசரேத் போலீசார் தாய், மகளை தாக்கிய பூல்பாண்டி மற்றும் அவரது மகன் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News