செய்திகள்
சேந்தமங்கலம் அருகே கோவிலில் 60 பவுன் நகை, ரூ.6 லட்சம் திருட்டு
சேந்தமங்கலம் அருகே கோவிலில் உள்ள 60 பவுன் சாமி நகையையும் உண்டியல் காணிக்கை ரூ.6 லட்சத்தையும் மர்ம கும்பல் திருடி சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேந்தமங்கலம்:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ளது பெருமாபாளையம். இந்த கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு சொந்தமான புடவைகாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் சாமி நகைகள் மற்றும் உண்டியல் காணிக்கையை பாதுகாப்பு அறையில் வைத்து இருந்தனர்.திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு கோவில் நிர்வாகிகள் பாதுகாப்பு அறையை திறந்து பார்த்தபோது அங்கு வைத்திருந்த சாமி நகைகள் 60 பவுன் மற்றும் உண்டியல் காணிக்கை ரூ. 6 லட்சம் ஆகியவற்றை காணவில்லை. அவற்றை மர்ம நபர் திருடிச்சென்றது தெரியவந்தது. இது பற்றி சேந்தமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். கோவிலில் நகை மற்றும் பணம் திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ளது பெருமாபாளையம். இந்த கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு சொந்தமான புடவைகாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் சாமி நகைகள் மற்றும் உண்டியல் காணிக்கையை பாதுகாப்பு அறையில் வைத்து இருந்தனர்.திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு கோவில் நிர்வாகிகள் பாதுகாப்பு அறையை திறந்து பார்த்தபோது அங்கு வைத்திருந்த சாமி நகைகள் 60 பவுன் மற்றும் உண்டியல் காணிக்கை ரூ. 6 லட்சம் ஆகியவற்றை காணவில்லை. அவற்றை மர்ம நபர் திருடிச்சென்றது தெரியவந்தது. இது பற்றி சேந்தமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். கோவிலில் நகை மற்றும் பணம் திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.