செய்திகள்

மதுரையில் வைகை ஆற்று சேற்றில் சிக்கி வியாபாரி பலி

Published On 2019-05-20 11:19 GMT   |   Update On 2019-05-20 11:19 GMT
மதுரையில் வைகை ஆற்று சேற்றில் சிக்கி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை தெப்பக்குளம் பங்கஜம் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது72). இவர் சொந்தமாக மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வந்தார்.

நேற்று மதியம் கறவைக்காக மாட்டை தேடியபோது அதனை காணவில்லை. எனவே மாட்டை தேடி அந்த பகுதியில் உள்ள வைகை ஆற்றுக்கு சென்றார்.

தியாகராஜர் கல்லூரி பின்புறம் உள்ள வைகை ஆற்றில் மாட்டை தேடிய போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த சேற்றில் கிருஷ்ணன் தவறி விழுந்தார். தலைகுப்புற விழுந்த அவர் சேற்றில் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தெப்பக்குளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அவர்கள் விரைந்து வந்து கிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News