செய்திகள்
கத்திவாக்கம் மேம்பாலத்தில் கலவை எந்திரம் மீது பஸ் மோதல்
கத்திவாக்கம் மேம்பாலத்தில் இன்று காலை கலவை எந்திரம் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் கத்திவாக்கம் மேம்பாலத்தில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவொற்றியூர்:
திருவான்மியூரில் இருந்து எண்ணூர் நோக்கி இன்று காலை மாநகர பஸ் (எண்1சி) வந்து கொண்டு இருந்தது.
கத்திவாக்கம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது முன்னால் டிராக்டர் மூலம் இழுத்து செல்லப்பட்ட கட்டுமான கலவை எந்திரம் திடீரென நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது.
அப்போது அந்த எந்திரத்தின் மீது பஸ் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் படிக்கட்டு உடைந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இதனையடுத்து டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார்.
இந்த விபத்தில் டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தியதாலும், படிக்கட்டில் பயணிகள் பயணம் செய்யாததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் மற்றொரு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் கத்திவாக்கம் மேம்பாலத்தில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சர்வீஸ் சாலையில் போக்குவரத்து மாற்றி இயக்கப்பட்டன. இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவான்மியூரில் இருந்து எண்ணூர் நோக்கி இன்று காலை மாநகர பஸ் (எண்1சி) வந்து கொண்டு இருந்தது.
கத்திவாக்கம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது முன்னால் டிராக்டர் மூலம் இழுத்து செல்லப்பட்ட கட்டுமான கலவை எந்திரம் திடீரென நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது.
அப்போது அந்த எந்திரத்தின் மீது பஸ் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் படிக்கட்டு உடைந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இதனையடுத்து டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார்.
இந்த விபத்தில் டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தியதாலும், படிக்கட்டில் பயணிகள் பயணம் செய்யாததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் மற்றொரு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் கத்திவாக்கம் மேம்பாலத்தில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சர்வீஸ் சாலையில் போக்குவரத்து மாற்றி இயக்கப்பட்டன. இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.