செய்திகள்
கோவையில் வெயில் கொடுமைக்கு 9-ம் வகுப்பு மாணவர் சுருண்டு விழுந்து மரணம்
கோவையில் வெயில் கொடுமைக்கு 9-ம் வகுப்பு மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை:
பொள்ளாச்சியை சேர்ந்தவர் குணசேகரன். லாரிகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சிவகார்த்திக் (வயது 15). அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். பள்ளி விடுமுறையை கழிக்க சிவகார்த்திக் கோவை பேரூர் செட்டிபாளையத்தில் உள்ள தாத்தா முனுசாமி வீட்டுக்கு வந்தார்.
இன்று காலை சிவகார்த்திக் சுட்டெரிக்கும் வெயிலில் விளையாடினார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த தாத்தா- பாட்டி மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பேரனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு சிவகார்த்திக்கை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொள்ளாச்சியை சேர்ந்தவர் குணசேகரன். லாரிகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சிவகார்த்திக் (வயது 15). அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். பள்ளி விடுமுறையை கழிக்க சிவகார்த்திக் கோவை பேரூர் செட்டிபாளையத்தில் உள்ள தாத்தா முனுசாமி வீட்டுக்கு வந்தார்.
இன்று காலை சிவகார்த்திக் சுட்டெரிக்கும் வெயிலில் விளையாடினார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த தாத்தா- பாட்டி மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பேரனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு சிவகார்த்திக்கை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.