செய்திகள்

பெரியகுளம் அருகே திருட்டை தடுத்த காவலாளி மீது தாக்குதல்

Published On 2019-05-06 11:32 GMT   |   Update On 2019-05-06 11:32 GMT
பெரியகுளம் அருகே திருட்டை தடுத்த காவலாளியை தாக்கிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

தேனி:

பெரியகுளம் அருகே உள்ள இ.புதுக்கோட்டை ஆரோக்கியமாதா நகரைச் சேர்ந்தவர் குமார் (வயது 42). இவர் கும்பக்கரை அருகே உள்ள முருக மலையில் பரவுக்காவல் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவருடன் அழகர், அய்யர் ஆகியோர் பணியில் இருந்தனர்.

அப்போது இரவு நேரத்தில் அவ்வழியாக ஒரு கார் வந்தது. லாரியில் வந்த கும்பல் மாந்தோப்புக்குள் புகுந்து மாங்காய்களை பறித்தனர். இதனை குமார் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் குமாரை தாக்கி மிரட்டினர்.

இது குறித்து பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் குமார் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் வந்த கும்பலிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி, பாரதிநகரைச் சேர்ந்த முனீஸ்வரன், ரவீந்திரன், மருதுபாண்டி என தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News