செய்திகள்

வடமதுரை அருகே சிறுமியை கொன்றது பிளஸ்2 படித்த மாணவன்- போலீசார் கைது செய்தனர்

Published On 2019-04-27 04:03 GMT   |   Update On 2019-04-27 04:07 GMT
வடமதுரை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த வழக்கில் பிளஸ்2 மாணவனை போலீசார் கைது செய்தனர். #DindigulGirlMolested
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள ஜி.குரும்பபட்டியில் 7ம் வகுப்பு மாணவி, கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தாள். சிறுமி வாயில் மின் வயரை கடித்த நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் கீறல்களும், ரத்த காயமும் இருந்தது. இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரது வீட்டுக்கு அருகே உள்ள 3 சிறுவர்களே இதில் ஈடுபட்டுள்ளனர் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், சிறுமியைக் கொன்றது அதே பகுதியைச் சேர்ந்த கிருபானந்தன் என தெரியவந்தது. பிளஸ் 2 படித்துள்ள அவன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், உயிருக்குப் போராடிய சிறுமியை மின்சாரம் பாய்ச்சி கொன்றதாக தெரியவந்துள்ளது. அவனை போலீசார் கைது செய்துள்ளனர். #DindigulGirlMolested
Tags:    

Similar News