செய்திகள்

விருதுநகரில் அட்டைப்பெட்டி ஆலையில் தீ விபத்து

Published On 2019-04-22 14:33 GMT   |   Update On 2019-04-22 14:33 GMT
அட்டைப்பெட்டி கம்பெனியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான அட்டைகள் எரிந்து நாசமாயின.

விருதுநகர்:

விருதுநகர் சூலக்கரையில் பாலாஜி பேக்கேஜிங் இண்ட ஸ்ட்ரீஸ் என்ற பெயரில் அட்டைப்பெட்டி தயாரிக்கும் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனி வளாகத்தில் அட்டை ரீல்கள் இருந்தன.

இதில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அட்டைகளில் பிடித்த தீ மளமளவென பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News