செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் வாய்ப்பு கேட்டு ஏ.கே. போஸ் மனைவி, மகன்கள் விருப்பமனு

Published On 2019-04-21 09:15 GMT   |   Update On 2019-04-21 09:15 GMT
திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட ஏ.கே. போஸ் மனைவி மற்றும் மகன்கள் விருப்பமனு கொடுத்துள்ளனர். #ADMK #ByElection
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க.வில் விருப்பமனு தாக்கல் இன்று தொடங்கியது.

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு ஏ.கே. போஸ் மறைவை தொடர்ந்து அந்த இடைத்தேர்தல் நடக்கிறது. அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு ஏ.கே. போஸ் மனைவி பாக்கிய லெட்சுமி, மகன்கள் சிவசுப்பிரமனியன் ஆகிய 3 பேரும் மனு கொடுத்தனர். மேலும் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கமும் மனு கொடுத்தார்.

ஒட்டபிடாரம் தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. மோகன் மனு கொடுத்துள்ளார். இன்று மாலை 5 மணிவரை மனு வாங்கப்படுகிறது.
Tags:    

Similar News