செய்திகள்

கோவை அருகே மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - போலீஸ்காரர் பலி

Published On 2019-04-19 10:41 GMT   |   Update On 2019-04-19 10:41 GMT
கோவை அருகே மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் போலீஸ்காரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஏகாம்பர குப்பத்தை சேர்ந்தவர் யேகநாதன். இவரது மகன் சீனிவாசன் (வயது 27). இவர் சென்னை வீராபுரம் 3-வது பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் சீனிவாசன் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தேர்தல் பணிக்காக கோவைக்கு வந்தார்.

சம்பவத்தன்று இவர் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் குப்புராஜ் (37) என்பவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்தார்.

மோட்டார் சைக்கிளில் உக்கடம் பைபாஸ் ரோட்டில் வந்து கொண்டு இருந்த போது வலது பக்கமாக திரும்பினார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் கட்டுப்பாட்டை இழந்து போலீஸ்காரர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் போலீஸ்காரர்கள் உள்பட 3 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் போலீஸ்காரர் சீனிவாசன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

படுகாயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் குப்புராஜ் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் போலீஸ்காரர் சீனிவாசனின் உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக 50 போலீஸ்காரர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தனர்.

துணை கமி‌ஷனர் பெருமாள் போலீஸ்காரர் சீனிவாசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது

Tags:    

Similar News