செய்திகள்
கோவை அருகே விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு
கோவை அருகே விவசாயியின் வீட்டின் பூட்டை 18 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை காளப்பட்டி அருகே உள்ள சக்தி வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 63). விவசாயி.
கடந்த 13-ந்தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றார். நேற்று வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த ஆறுமுகம் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.
அறையில் இருந்த பீரோவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த 15 பவுன் தங்க செயின், கம்மல், மோதிரம் உள்பட மொத்தம் 18 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து ஆறுமுகம் கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக இன்ஸ்பெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர் அங்கு பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவை காளப்பட்டி அருகே உள்ள சக்தி வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 63). விவசாயி.
கடந்த 13-ந்தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றார். நேற்று வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த ஆறுமுகம் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.
அறையில் இருந்த பீரோவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த 15 பவுன் தங்க செயின், கம்மல், மோதிரம் உள்பட மொத்தம் 18 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து ஆறுமுகம் கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக இன்ஸ்பெக்டர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர் அங்கு பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.