செய்திகள்
பொள்ளாச்சி அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி புரவி பாளையத்தை சேர்ந்தவர் கோபி கணேசன்(வயது 23). இவர் சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் இன்று அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார். புகாரின்பேரில் சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காதல் தோல்வி காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு காரணங்கள் எதுவும் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.