செய்திகள்
மதுரை அருகே மாணவியுடன் ரகசிய திருமணம்- ஆட்டோ டிரைவர் மீது புகார்
மாணவியை ரகசிய திருமணம் செய்த ஆட்டோ டிரைவர், இரண்டாவதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் சக்திவேல் (வயது 20). ஆட்டோ டிரைவர். இவர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 17 வயது மாணவியை கடந்த 8 மாதங்களாக காதலித்துள்ளார்.
வீட்டில் யாருக்கும் தெரியாமல் டி.கல்லுப்பட்டி கோவிலில் வைத்து மாணவியை ரகசிய திருமணமும் செய்துள்ளார்.
ஆனால் கடந்த சில நாட்களாக மாணவியுடன் சேர்ந்து வாழ சக்திவேல் மறுத்துள்ளார். இதுகுறித்து மாணவி தரப்பில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
அதில், சக்திவேல் வேறு பெண்ணை திருமணம் செய்யும் நோக்கத்தில் இருப்பதாகவும், அதற்காகவே தன்னுடன் வாழ மறுப்பதாகவும் மாணவி தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.