செய்திகள்

தட்டாஞ்சாவடியில் தனியார் இன்சூரன்சு நிறுவன ஊழியர் மனைவி தற்கொலை

Published On 2019-04-06 11:50 GMT   |   Update On 2019-04-06 11:50 GMT
குடும்ப தகராறில் தனியார் இன்சூரன்சு நிறுவன ஊழியர் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

தட்டாஞ்சாவடி காந்திநகர் முதல் தெருவை சேர்ந்தவர் மேரிஜான். இவர் தனியார் இன்சூரன்சு நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி (வயது34). இவர்களுக்கு வர்ஷினி(6) என்ற மகள் உள்ளார். இவள் அங்குள்ள பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

இந்த நிலையில் மேரிஜானுக்கும் கலைச்செல்விக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மகள் வர்ஷினி படிக்கும் பள்ளியில் கல்வி கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. இதைத்தொடர்ந்து கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் கலைச்செல்வி மனவேதனை அடைந்தார். பின்னர் அவர் வீட்டுக்குள் சென்ற அவர் உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டார். உடனே கணவர் மேரிஜான் கதவை திறக்கும்படி கூறினார். ஆனால் கலைச்செல்வி கதவை திறக்காமல் அங்குள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கில் தொங்கினார்.

மேரிஜான் ஜன்னல் வழியாக எட்டிபார்த்த போது மனைவி உள்ளே தூக்கில் தொங்குவதை பார்த்து கதறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். பின்பு அவர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து தூக்கில் தொங்கிய கலைச்செல்வியை மீட்டு கதிர்காமம் அரசுமருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் கலைச்செல்வி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கோரிமேடு போலீசில் கலைச்செல்வியின் தாயார் ஆனந்தகவுரி புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், ஏட்டு வெங்கடேசன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News