செய்திகள்

வீராம்பட்டினத்தில் மீனவரை தாக்கி கொலை மிரட்டல்- வாலிபர் கைது

Published On 2019-04-01 09:58 GMT   |   Update On 2019-04-01 09:58 GMT
வீராம்பட்டினத்தில் மீனவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகூர்:

வீராம்பட்டினம் நாகூரான் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வீரப்பன் (வயது36), மீனவர். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கவிதா கடந்த 6 மாதமாக கணவரை விட்டு பிரிந்து முதலியார்பேட்டையில் உள்ள தனது அண்ணன் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கவிதா தனக்கு அளித்த தாய்வீட்டு சீதனங்களை கணவர் வீட்டில் இருந்து எடுத்து வரும்படி அரியாங்குப்பம் சண்முகா நகரை சேர்ந்த செந்தில் (30) மற்றும் ராம்ஜி நகரை சேர்ந்த ரமணா ஆகியோரிடம் கூறினார்.

அதன்படி செந்திலும், ரமணாவும் வீரப்பன் வீட்டுக்கு சென்று அங்கிருந்த பொருட்களை எடுக்க முயன்றனர். ஆனால் இதற்கு வீரப்பன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த செந்திலும், ரமணாவும் சேர்ந்து உருட்டு கட்டையால் வீரப்பனை சரமாரியாக தாக்கினர். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு சென்றனர்.

இதுகுறித்து வீரப்பன் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்குபதிவு செய்து செந்திலை கைது செய்தார். ரமணாவை தேடி வருகிறார். மேலும் இந்த சம்பவத்துக்கு காரணமான கவிதா மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News