search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fishermen attack"

    • சமீப காலமாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளது.
    • மத்திய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை :

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் 22-1-2024 அன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் IND-TN-10-MM-769 மற்றும் IND-TN-10-MM-750 என்ற பதிவு எண்களைக் கொண்ட மீன்பிடிப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், 22-1-2024 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    சமீப காலமாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளது என்றும், இத்தகைய போக்கு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால், இதில் மத்திய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இத்தகைய தொடர் கைது நடவடிக்கைகள், தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பறிப்பதோடு, மீனவ மக்களிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற சூழலையும் உருவாக்கியுள்ளதாகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவச் சமூகங்களின் கலாசார மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை அச்சுறுத்தும் வகையில் உள்ளதாகவும் முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள முதலமைச்சர், மீனவர்கள் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவினை அமைப்பதன் மூலம் இது சாத்தியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

    அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தவிர்க்கவும், இந்திய மீனவர்களுக்கும், இலங்கைக் கடற்படையினருக்கும் இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஏதுவாகவும், உரிய தூதரக வழிமுறைகளை மேற்கொண்டு கூட்டு நடவடிக்கைக் குழுவினை கூட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை மந்திரியைக் கேட்டுக்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், இலங்கைக் காவலில் உள்ள தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விரைந்து விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

    கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மீனவர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று கடலுக்கு புறப்பட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.

    அப்போது 20 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்தனர்.

    மேலும் இந்த பகுதியில் மீன்பிடிக்க வரக்கூடாது என எச்சரித்தனர். அதனையும் மீறி வந்தால் சிறைபிடிப்போம் என கூறினர். பின்னர் இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களின் படகுகளில் ஏறி வலைகள், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதோடு விரட்டியடித்தனர்.

    உயிருக்கு பயந்த மீனவர்கள் அவசரம் அவசரமாக கரை திரும்பினர். இலங்கை கடற்படையினர் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதால் படகு ஒன்றுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படையினர் எங்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். தற்போது மீண்டும் விரட்டியடித்துள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்றனர்.
    கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேசுவரம் மீனவர்களை தாக்கி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். #Fishermen #SriLankanNavy #TNFishermen

    ராமேசுவரம்:

    இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 12 நாட்களாக ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு பின் மீனவர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு விட்டு நேற்று கடலுக்கு புறப்பட்டனர்.

    ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 300 விசைப்படகுகளில் சென்றனர்.

    இதில் பெரும்பாலானோர் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது 8 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களிடம் இங்கு மீன் பிடிக்கக்கூடாது எனக்கூறி எச்சரித்தனர்.

    மேலும் மீனவர்களின் படகுகளில் ஏறிய அவர்கள் வலை, மீன்பிடி சாதனங்கள் போன்றவற்றை சேதப்படுத்தியதோடு ஏற்கனவே பிடித்திருந்த மீன்களையும் பறித்துக் கொண்டனர்.

    தொடர்ந்து இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்கி ‘இங்கிருந்து செல்லுங்கள் இல்லையென்றால் சிறை பிடிக்கப்படுவீர்கள்’ என எச்சரித்தனர். இதனால் பீதியடைந்த மீனவர்கள் மீன் பிடிக்காமல் பாதியிலேயே ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.

    இது குறித்து ராமேவரம் மீனவர்கள் கூறுகையில், வேலை நிறுத்தத்திற்கு பின் நேற்று தான் கடலுக்கு சென்றோம். இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து எங்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என வருத்தத்துடன் கூறினர்.  #Fishermen #SriLankanNavy #TNFishermen

    ×