செய்திகள்

தேனி அருகே கார் டிரைவருக்கு கத்திக்குத்து

Published On 2019-03-25 10:26 GMT   |   Update On 2019-03-25 10:26 GMT
தேனி அருகே கார் டிரைவரை கத்தியால் குத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி:

தேனி அருகே உத்தமபாளையத்தை சேர்ந்தவர் கருணாநிதி (வயது54). தனியார் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று உத்தமபாளையம் வாகன காப்பகம் அருகே காரை நிறுத்தி இருந்தார்.

அப்போது செல்வம் என்பவர் கருணாநிதி காரை மறித்து அவரது காரை நிறுத்தி சென்றுள்ளார். இதனால் கருணாநிதி செல்வத்திடம் காரை எடுக்க வேண்டும், ஏன் இப்படி மறித்து நிறுத்துகிறீர்கள் என தட்டி கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கருணாநிதியை குத்தி விட்டு தப்பி ஓடி உள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த அவர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய செல்வத்தை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News