செய்திகள்
ஆறுமுகநேரி அருகே மோட்டார்சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
ஆறுமுகநேரி அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி பகுதியில் கஞ்சா புழக்கத்தை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் பத்திரகாளி மற்றும் போலீசார் அங்குள்ள பைபாஸ் சாலையில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்த வாலிபரை தடுத்து நிறுத்தினர்.
அவர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை வேறு பாதையில் திருப்பி தப்ப முயன்றார். உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். விசாரணையில் அவர் சீதக்காதிநகரை சேர்ந்த முகமது யூசுப்(21) என்பதும், அவர் ஒரு கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து முகமது யூசுப்பை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஆறுமுகநேரி பகுதியில் கஞ்சா புழக்கத்தை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் பத்திரகாளி மற்றும் போலீசார் அங்குள்ள பைபாஸ் சாலையில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்த வாலிபரை தடுத்து நிறுத்தினர்.
அவர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை வேறு பாதையில் திருப்பி தப்ப முயன்றார். உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். விசாரணையில் அவர் சீதக்காதிநகரை சேர்ந்த முகமது யூசுப்(21) என்பதும், அவர் ஒரு கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து முகமது யூசுப்பை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.