செய்திகள்
கோவை அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த துப்புரவு தொழிலாளி பலி
கோவை அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த துப்புரவு தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை போத்தனூரை சேர்ந்தவர் மோகன் (வயது 48). துப்புரவு தொழிலாளி. சம்பவத்தன்று இவர் குடிபோதையில் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மோகனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.