செய்திகள்

நாகை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 5 பேர் கைது

Published On 2019-03-19 17:17 GMT   |   Update On 2019-03-19 17:17 GMT
நாகை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 5 பேரை கைது செய்த போலீசார் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்:

நாகையை அடுத்த நாகூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், ஏட்டு ஜெயராமன், பெண் தலைமைக் காவலர் ஷோபா மற்றும் போலீசார் இன்று காலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது நாகூர் வெட்டாறு பாலம் அருகில் உள்ள ஆற்றில் 5 மாட்டு வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்த கண்டனர். உடனே அவர்களை அழைத்து விசாரித்ததில் அரசு உரிய அனுமதியின்றி இல்லாமல் மணல் அள்ளுவது தெரிய வந்தது.

உடனே மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்த நாகூர் போலீசார் நாகூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து 5 பேரையும் விசாரணை செய்தனர்.

இதில் தெத்தி சிவன் சன்னதி தெருவை சேர்ந்த முத்துக்குமார் (வயது 38) அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை (40) தெற்கு தெருவை சேர்ந்த ராஜகுரு (44) மேலத்தெருவை சேர்ந்த கல்யாணசுந்தரம் (45) வடகுடி வடக்கு தெருவை சேர்ந்த மணிகண்டன்(38) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் அள்ளிய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்து 5 பேரையும் கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News