செய்திகள்

முதுகுளத்தூர் அருகே 52 மதுபாட்டில்கள் பறிமுதல்- 2 பேர் கைது

Published On 2019-03-16 09:56 GMT   |   Update On 2019-03-16 09:56 GMT
முதுகுளத்தூர் அருகே திருட்டுதனமாக விற்பனைக்காக கொண்டு சென்ற 52 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
முதுகுளத்தூர்:

முதுகுளத்தூர் கீழத்தூவல் அருகே சாம்பக்குளம் விலக்குரோட்டில் எஸ்.ஐ., முத்துமாணிக்கம் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது சாம்பக்குளத்தை சேர்ந்த பாக்கியம் (50), டுவீலரில் அனுமதியின்றி 26 மதுபாட்டில்கள் கடத்துவது சோதனையில் தெரிய வந்தது. போலீசார் மது பாட்டிலை பறிமுதல் செய்து, பாக்கியத்தை கைது செய்தனர்.

மேலும் திருவரங்கம் - கொழுந்துறை கண்மாய் பகுதியில் மது விற்பனை செய்வதாக, கீழத்தூவல் போலீசாருக்கு தகவல் கிடைத்ததன்பேரில், தனிப்படை போலீசார் சம்பவ இடத்தில் சோதனை செய்தனர்.

அப்போது அலங்கானுரை சேர்ந்த சதக்அப்துல்லா (38), என்பவர் மறைத்து வைத்திருந்த 26 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

திருட்டு தனமாக விற்பனைக்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்த இருவர் மீதும் கீழத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Tags:    

Similar News