செய்திகள்

பொன்னேரி அருகே சமையல் செய்யும் போது சேலையில் தீப்பிடித்து பெண் பலி

Published On 2019-03-16 06:30 GMT   |   Update On 2019-03-16 06:30 GMT
பொன்னேரி அருகே சமையல் செய்யும் போது சேலையில் தீப்பிடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த விடதண்டலம் கிராமத்தைச்சேர்ந்தவர் மூர்த்தி. கூலித்தொழிலாளி .

இவரது மனைவி தங்கம் (36) வீட்டில் மண்ணெண்ணெய் ஸ்டவ்வில் சமையல் செய்த போது சேலையில் தீப்பிடித்து உடலில் பரவியது.

உடல் கருகிய நிலையில் அவரை பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்குசிகிச்சைபலனின்றி தங்கம் இறந்துவிட்டார். இது குறித்து பொன்னேரி போலிசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News