செய்திகள்

பெங்களூரு ரவுடி கொலையில் மேலும் ஒரு வாலிபர் கைது

Published On 2019-03-14 14:06 GMT   |   Update On 2019-03-14 14:06 GMT
பெங்களூரு ரவுடி கொலையில் மேலும் ஒரு வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை:

கர்நாடக மாநிலம், பெங்களூரு பொம்மன அள்ளி அருகே மங்கமனப்பான்யா பகுதியைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 38). ரவடியான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் இஸ்மாயில் கடந்த 12-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள தனது நண்பர் நஷீர் வீட்டிற்கு தனது காரில் வந்தார். 

அப்போது அவரை 2 கார்களில் 7 பேர் கொண்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் பின் தொடர்ந்து வந்தனர். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாள்களால் இஸ்மாயிலை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து அவரை கொலை செய்த கும்பலை சேர்ந்தவர்கள் அவர்கள் வந்த காரில் ஏறி தப்பி சென்றனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த தேன் கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடிவந்தனர். நேற்று பெங்களூர் மற்றும் தேனிகனிக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் இஸ்மாயில் ரியல் எஸ்டேட் தொழில் போட்டி காரணமாக கொலை செய்ததாக தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று இரவு மேலும் ஒரு வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து இந்த கொலை சம்பவத்தில் மேலும் யாராவது சம்பந்தப்பட்டு உள்ளனரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News