செய்திகள்

தக்கலை அருகே மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை

Published On 2019-03-12 11:09 GMT   |   Update On 2019-03-12 11:09 GMT
தக்கலை அருகே மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தக்கலை:

தக்கலையை அடுத்த கேரளபுரம், சங்கரன்காவு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 37). தொழிலாளி.

குமாருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சனை தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதில் குமாரின் மனைவி, 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு தனியாக சென்று விட்டார்.

மனைவி பிரிந்து சென்றதால் குமார் மனம் உடைந்து காணப்பட்டார். மேலும் மது போதைக்கும் ஆளானார். நேற்று இவர் வீட்டில் இருந்து திருவிதாங்கோடு பகுதிக்கு சென்றார்.

அங்கு மீன் மார்க்கெட் அருகே மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து குமாரின் சகோதரர் இது பற்றி தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் குமார் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து தக்கலை போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News