செய்திகள்
திருச்சியில் மதிமுக சார்பில் சர்வதேச மகளிர் தின விழா- வைகோ கலந்து கொண்டார்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ம.தி.மு.க. மகளிரணி சார்பில் உலக மகளிர் தினவிழா மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். #vaiko
திருச்சி:
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ம.தி.மு.க. மகளிரணி சார்பில் உலக மகளிர் தினவிழா மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரோஷன் மகாலில் இன்று நடைபெற்றது.
விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக மேடையில் அமைக்கப்பட்டிருந்த விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் தாயார் பர்வதம்மாள் மற்றும் வைகோவின் தாயார் மாரியம்மாள் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
விழாவில் கட்சியின் மாநில நிர்வாகிகள், மகளிரணியினர், பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி நடந்த கருத்தரங்கில் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். #vaiko