செய்திகள்
எருதாட்ட விழாவில் மாடு முட்டி விவசாயி பலி
எருதாட்ட விழாவில் மாடு முட்டி விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சூளகிரி அருகே உலகம் கிராமத்தில் இன்று எருதாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் ஓசூர், சூளகிரி, வேப்பனஹள்ளி மற்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள் பங்கேற்றன.
இந்த விழாவில் வேடிக்கை பார்க்க வந்த கோவில் எப்பளம் கிராமத்தை சேர்ந்த மாதையன் (வயது50) என்ற விவசாயியை வேகமாக ஓடி வந்த ஒரு காளை முட்டியது. இதில் குடல் சிதறி சம்பவ இடத்திலேயே அவர் உயிர் இழந்தார்.