செய்திகள்

தஞ்சை அருகே தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து ரூ.2 லட்சம் நகை-பணம் கொள்ளை

Published On 2019-03-03 12:59 GMT   |   Update On 2019-03-03 12:59 GMT
தஞ்சை அருகே தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் 19 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

வல்லம்:

தஞ்சையை அடுத்த அற்புதாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சவரிமுத்து. இவரது மனைவி மரியம்மாள் (வயது 55). கூலி தொழிலாளி.

சம்பவத்தன்று மரியம்மாள் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் மரியம்மாள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் 19 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். கொள்ளை போனவற்றின் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சத்து 70 ஆயிரம் ஆகும். பின்னர் வீட்டுக்கு வந்த மரியம்மாள் வீட்டு கதவு உடைக்கபட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. மர்ம நபர்கள் பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இது பற்றி அவர் வல்லம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News