செய்திகள்
கோப்புப்படம்

உயிரிழந்த 36 தீயணைப்பு வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Published On 2019-03-03 08:15 GMT   |   Update On 2019-03-03 08:15 GMT
விபத்து- உடல்நல குறைவால் மரணம் அடைந்த 36 தீயணைப்பு வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சென்னை:

விபத்து, உடல்நலக் குறைவால் உயிரிழந்த 36 தீயணைப்பாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் தீயணைப்பு நிலைய டிரைவர் வேம்பு, முசிறி தீயணைப்பு நிலைய வீரர் சீனிவாசன், மற்றும் நிலைய அலுவலர் இளங்கோவன், திருவண்ணாமலை சேத்து பட்டு தீயணைப்பு நிலைய வீரர் ரவி, உதகமண்டலம் தீயணைப்பு நிலைய வீரர் சுந்தரேஷ். பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர் நடராஜன், திருவாடானை தீயணைப்பு நிலைய வீரர் கணேசன்.

திருவல்லிக்கேணி தீயணைப்பு நிலைய வீரர் தாமோதரன், தரங்கம்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபி, அலங்காநல்லூர் தீயணைப்பு நிலைய டிரைவர் தங்கப்பாண்டியன், பூம்புகார் தீயணைப்பு நிலைய வீரர் மோகன், அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர் ராஜமோகன்.

சைதாப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர் ரவிச்சந்திரன், கொல்லிமலை தீயணைப்பு நிலைய வீரர் பாலகுருநாதன். தென் சென்னை தீய ணைப்பு நிலைய வீரர் செல்வம், கள்ளிக்குடி தீயணைப்பு நிலைய வீரர் சுதா கரன், சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர் சந்தணகுமார். சிதம்பரம் தீயணைப்பு நிலைய வீரர் மோகன்தாஸ் ஆகியோர் உடல் நலக்குறைவால் காலமானார்கள்.

திருவொற்றியூர் தீயணைப்பு நிலைய வீரர் ரகுநாதன், சத்தியமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர் பிரபாகரன், மரக்காணம் தீயணைப்பு நிலைய டிரைவர் முனுசாமி, திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலை வீரர் ராகவன். விளாத்திகுளம் தீயணைப்பு நிலை வீரர் லிங்கராஜ், வேடசந்தூர் தீயணைப்பு நிலைய வீரர் திரவியமோகன்.

ஆலங்காயம் தீயணைப்பு நிலைய வீரர் பாபு, ஆர்.எஸ். மங்கலம் தீயணைப்பு நிலைய வீரர் மகாலிங்கம். சின்னசேலம் தீயணைப்பு நிலைய வீரர் வாசுதேவன், வண்ணையம்பதி தீயணைப்பு நிலைய டிரைவர் பாபு, அம்பத்தூர் தீயணைப்பு நிலையத்தின் தீயணைப்பாளர் ராஜா.

ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய வீரர் குணேந்திரன், ஊத்தங்கரை தீயணைப்பு நிலைய வீரர் சுதாகர், விளாத்திகுளம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பாளர் நம்பிராஜ். காட்டுமன்னார்கோயில் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் சீனிவாசன், ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய வீரர் ராஜதுரை.

பெரம்பலூர் தீயணைப்பு நிலைய டிரைவர் ரவி, தேர்வாய்கண்டிகை தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பாளர் ரமேஷ் ஆகியோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர்.

இவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த 36 தீயணைப்பாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News