செய்திகள்

மனைவி திட்டியதால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-02-27 13:13 GMT   |   Update On 2019-02-27 13:13 GMT
புதுவை உருளையன்பேட்டையில் மனைவி திட்டியதால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

புதுவை உருளையன்பேட்டை ராஜாநகர் ரைஸ்மில் வீதியை சேர்ந்தவர் செங்கேணி (வயது55), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ருக்மணி வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

கடந்த சில நாட்களாக செங்கேணி வேலைக்கு ஏதும் செல்லாமல் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். மேலும் ருக்மணி மற்றும் உறவினர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மதுகுடித்து வந்தார். இதனை ருக்மணி கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த செங்கேணி மனைவி வீட்டின் மாடிக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ருக்மணி உருளையன்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் ஏட்டு ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செங்கேணியை தூக்கில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News