செய்திகள்
தென்காசி அருகே கியாஸ் கசிந்து வீட்டில் தீ விபத்து- கட்டிடம் சேதம்
தென்காசி அருகே வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டின் சுவர் சேதமடைந்தது.
தென்காசி:
தென்காசி அருகே உள்ள பாட்டப்பத்து பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம். இவர் காய்கறி கடையில் வேலை செய்து வருகிறார். இன்று காலை இவரது வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது.
அப்போது கியாஸ் சிலிண்டர் வெடித்ததாக தெரிகிறது. இதில் வீட்டின் சுவர் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தென்காசி தீயணைப்புபடையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.