செய்திகள்
ஒட்டன்சத்திரம் அருகே லாரியில் மணல் கடத்திய டிரைவர் கைது
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அனுமதியின்றி லாரியில் மணல் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் சாலை புதுசத்திரம் அருகே ஒட்டன் சத்திரம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கோபிகிருஷ்ணன் குருமூர்த்தி மற்றும்காவல்துறையினர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது மணப்பாறை வெயிலடிச்சான்பட்டி பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் மோகன்( 21)என்பவர் எவ்வித அரசு அனுமதியுமின்றி விராலிமலையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் மணல் ஏற்றி வந்த லாரியை கைப்பற்றி டிரைவர் மோகனையும் கைது செய்தனர்.
திண்டுக்கல் சாலை புதுசத்திரம் அருகே ஒட்டன் சத்திரம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கோபிகிருஷ்ணன் குருமூர்த்தி மற்றும்காவல்துறையினர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது மணப்பாறை வெயிலடிச்சான்பட்டி பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் மோகன்( 21)என்பவர் எவ்வித அரசு அனுமதியுமின்றி விராலிமலையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் மணல் ஏற்றி வந்த லாரியை கைப்பற்றி டிரைவர் மோகனையும் கைது செய்தனர்.