செய்திகள்

சுசீந்திரம் அருகே சலூன்கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு

Published On 2019-02-18 14:31 GMT   |   Update On 2019-02-18 14:31 GMT
சுசீந்திரம் அருகே சலூன்கடை பூட்டை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

என்.ஜி.ஓ. காலனி:

சுசீந்திரம் மேலகிருஷ்ணன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 30). இவர் மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பில் சலூன்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று காலையில் கடைக்கு வந்த அவர் வேலை முடிந்து இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் கடையை திறப்பதற்காக வந்தார்.

அப்போது கடையின் ‌ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு சப்- இன்ஸ்பெக்டர் அஜ்மல் ஜெனிப், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பிரசாத்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கடையினுள் சென்று பார்த்தனர். அப்போது மேஜை டிராயர் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.5 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதேபோல் அதற்கு அருகே கேசவன்புதூரை சேர்ந்த ஜோஸ் (63) என்பவர் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். அவரது ஸ்டூடியோ கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த மேஜை டிராயரை உடைத்து பார்த்தனர். ஆனால் பணம் எதுவும் இல்லை. இதனால் அங்கிருந்த பொருட்களை நாலாபுறமும் வீசி சென்றிருந்தனர்.

இந்த 2 சம்பவங்கள் குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளை நடந்த கடை அருகே ஒரு தனியார் வங்கி ஒன்று உள்ளது. அதில் உள்ள கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து கொள்ளையர்களின் உருவம் பதிந்துள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News