செய்திகள்

விருகம்பாக்கத்தில் கடன் பிரச்சனையால் தொழிலாளி தற்கொலை

Published On 2019-02-17 09:20 GMT   |   Update On 2019-02-17 09:20 GMT
விருகம்பாக்கத்தில் கடன் பிரச்சனையால் விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீகார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:

விருகம்பாக்கம் இளங்கோ நகர் பச்சையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். கூலி தொழிலாளி. கடந்த சில மாதங்களாக கடன் பிரச்சனையால் தவித்து வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணன் கடந்த 8-ந்தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்தார்.

இதில் மயங்கி விழுந்த கிருஷ்ணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச் சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News