செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே 12-ம் வகுப்பு மாணவன் ரெயில் முன் பாய்ந்து பலி

Published On 2019-02-13 07:16 GMT   |   Update On 2019-02-13 07:16 GMT
கும்மிடிப்பூண்டி அருகே அண்ணன் இறந்த சோகத்தில் 12-ம் வகுப்பு மாணவன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள தோப்பு கொல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி (வயது17). இவர் கவரைப்பேட்டை அரசினர் மேனிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவரது தாய், தந்தை ஏற்கனவே இறந்து விட்டனர். இந்த நிலையில் கடந்த மாதம் அவரது அண்ணனும் இறந்து போனார். இதனால் காந்தி மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு கவரைப்பேட்டை ரெயில் நிலையத்திற்கு காந்தி வந்தார். ரெயில் நிலையம் அருகே நடந்து சென்ற அவர் திடீரென சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கிச்சென்ற புறநகர் மின்சார ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

ரெயில்வே போலீசார் காந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி தலைமையில் கொருக்குபேட்டை ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News