செய்திகள்

திருக்கனூர் அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்

Published On 2019-02-11 09:45 GMT   |   Update On 2019-02-11 09:45 GMT
திருக்கனூர் அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கனூர்:

திருக்கனூரை அடுத்த காட்டேரிக்குப்பம் புதுநகர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்புராயலு. இவரது மகள் சுகன்யா (வயது20). இவர் காட்டேரிக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு டெய்லர் கடையில் வேலை செய்து வந்தார்.

சம்பவத்தன்று சுகன்யா வேலைக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிசென்றார். ஆனால் அதன்பிறகு சுகன்யா வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் சுகன்யா இல்லை.

இதையடுத்து சுகன்யாவின் அண்ணன் கார்த்திக் தனது தங்கை மாயமானது குறித்து காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து சுகன்யாவை யாராவது கடத்தி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Tags:    

Similar News