செய்திகள்

தண்டராம்பட்டு அருகே கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2019-02-07 12:06 GMT   |   Update On 2019-02-07 12:06 GMT
தண்டராம்பட்டு அருகே நேற்று இரவு வீட்டில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்டராம்பட்டு:

தண்டராம்பட்டு அருகே உள்ள கனந்தம்பூண்டியை சேர்ந்தவர் கண்ணன் அவரது மகன் அஜித்குமார் (வயது 21). திருவண்ணாமலையில் உள்ள அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு தமிழ் படித்து வந்தார்.

இந்நிலையில் அஜித்குமார் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த தண்டராம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News