செய்திகள்

கொடைக்கானலில் பெண்ணிடம் கைப்பையை பறித்துச்சென்ற கொள்ளையர்கள்

Published On 2019-02-06 11:21 GMT   |   Update On 2019-02-06 11:21 GMT
கொடைக்கானலில் வெளி மாவட்டங்களை சேர்ந்த கொள்ளையர்கள் சமீப காலமாக ஊடுருவி வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் சென்னை போன்ற பெரு நகரங்களில் நடப்பது போல பைக்கில் சென்று கொள்ளையடித்து கைவரிசை காட்டி வருவது நகர மக்களை பீதி அடைய வைத்துள்ளது.

கொடைக்கானல்:

கொடைக்கானல் லாஸ்காட்ரோடு பகுதி அரசு மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த கார்மெல்மேரி (வயது38) என்பவரிடமிருந்து அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த மேல்மலை கூக்கால் கிராமத்தைசேர்ந்த சிவா (19), நவரத்தினம் என்ற ராசுக்குட்டி (19),விஜய் என்ற கட்டாரி (16)ஆகியோர் கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பையை பறித்துக் கொண்டு சென்றுள்ளனர்.

அந்த பெண் கூச்சலிடவே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பெருமாள் மலை சோதனைச் சாவடி போலீசார் வாகனச் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த மூவரையும் கைது செய்தனர்.

கொடைக்கானல் சப்-இன்ஸ்பெக்டர் பொன்குண சேகரன் அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்த கைப்பையை கைப்பற்றி அதில் இருந்த பணம் மற்றும் பொருட்களை பெண்ணிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் கொடைக்கானல் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News