செய்திகள்

போலீசாரை கண்டித்து வாடகை கார் டிரைவர்கள் வேலைநிறுத்தம்

Published On 2019-02-05 14:14 GMT   |   Update On 2019-02-05 14:14 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் இன்று சென்னை போலீசாரை கண்டித்து வாடகை கார் டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவேரிப்பட்டணம்:

சென்னையை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் ராஜேஸ் ரெயில் தண்டவாளம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை போலீசாரை கண்டித்து அவர் பேசிய வீடியோ வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்ககோரி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டத்தில் இன்று வாடகை கார் டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுற்றுலா கார்கள் இன்று ஓடவில்லை. #tamilnews
Tags:    

Similar News