செய்திகள்

ஒட்டன்சத்திரம் அருகே திருமண ஆசை காட்டி பெண் பலாத்காரம்

Published On 2019-02-03 11:00 GMT   |   Update On 2019-02-03 11:00 GMT
ஒட்டன்சத்திரம் அருகே திருமண ஆசை காட்டி பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கையைச் சேர்ந்தவர் துரைச்சாமி மகன் சூரிய குமார் (வயது 23). இவருக்கும் கொடைக்கானலைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

சம்பவத்தன்று சூரியகுமார் இளம்பெண்ணை ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்னர் இளம்பெண்ணை சந்திப்பதை சூரிய குமார் தவிர்த்து வந்துள்ளார்.

திடீரென சூரியகுமார் தலைமறைவானார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து சூரியகுமாரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News