செய்திகள்
வங்கியில் ரூ.32 லட்சம் மோசடி: பெண் நகை மதிப்பீட்டாளர் கைது
கிருஷ்ணகிரியில் வங்கியில் ரூ.32 லட்சம் மோசடி செய்த பெண் நகை மதிப்பீட்டாளர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் இவரது மனைவி தேவிகா. இவர் கிருஷ்ணகிரி-சென்னை சாலையில் உள்ள அலாகபாத் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை பணியாற்றினார். அப்போது 53 நபர்களின் நகை கடன்களில் ரூ.32 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதற்கு 23 பேர் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.
இது குறித்து வங்கியின் மேலாளர் நரசிங்க ராவ் கிருஷ்ணகிரி குற்றபிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தேவிகாவை கைது செய்தனர்.