செய்திகள்

திருமங்கலம் அருகே தேள் கொட்டியதில் 2 வயது குழந்தை பலி

Published On 2019-01-31 12:30 GMT   |   Update On 2019-01-31 12:30 GMT
திருமங்கலம் அருகே தேள் கடித்து 2 வயது சிறுவன் இறந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள பெரிய மறவன்குளம் சோனைகோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி நாகஜோதி. இவர்களது 2 வயது குழந்தை ஜெய்ஹரீஷ்.

இவனது பாட்டி பானுமதி, டி.புதுப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உறவினரை பார்க்கச் சென்றார். அப்போது ஜெய்ஹரீசையும் அழைத்துச் சென்றார்.

ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஜெய்ஹரீஷ் விளையாடியபோது, தேள் கொட்டியது. உடனடியாக அவனை சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ஜெய்ஹரீஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News