செய்திகள்

காரிமங்கலம் அருகே மர்மமாக இறந்த மாணவி - போலீசார் விசாரணை

Published On 2019-01-30 15:59 GMT   |   Update On 2019-01-30 15:59 GMT
காரிமங்கலம் அருகே வீட்டில் மர்மமான முறையில் மாணவி இறந்து கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காரிமங்கலம்:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த சொன்னம்பட்டி கலைஞர் நகர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கவி (16). இவர் சேலம் தனியார் டிப்ளமோ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் பயின்று வந்தார். இவரது சகோதரி மலர்வேணி மற்றும் மாலதி ஆகியோர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்ற காரணத்தினால், இவர்களது தாயார் சாந்தி சேலம் அம்மாபேட்டையில் தனியாக வாடகை வீடு எடுத்து அங்கேயே தற்காலிகமாக குடியிருந்து வருகின்றார். 

இந்நிலையில் நேற்று (29-ந் தேதி) மாலை குடும்ப பிரச்சினை காரணமாக சங்கவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சாந்தி இறந்த சங்கவியை இரவோடு இரவாக காரிமங்கலத்தை அடுத்த சொன்னம்பட்டி கிராமத்திற்கு எடுத்து வந்து சொந்த வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடியுள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் வந்தது.

காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சங்கவி பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News