செய்திகள்

சிங்காநல்லூரில் என்ஜினீயர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு

Published On 2019-01-28 10:12 GMT   |   Update On 2019-01-28 10:12 GMT
கோவை சிங்காநல்லூர் அருகே என்ஜினீயர் வீடடின் முன் பக்க கதவை உடைத்து 25 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
கோவை:

கோவை சிங்காநல்லூரை அடுத்த இருகூரை சேர்ந்தவர் பிரசன்ன பாபு(வயது 37). என்ஜினீயர்.

இவர் பீளமேடு ஐ.டி. பூங்காவில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 24-ந்தேதி பிரசன்ன பாபு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் நெல்லை சென்றார்.

இன்று அதிகாலை அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்ற போது பீரோ உடைக்கப்பட்டு 25 பவுன் தங்க நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

வீட்டில் ஆள் இல்லாததை கண்காணித்து மர்மநபர்கள் கதவை உடைத்து கைவரிசை காட்டி உள்ளனர். அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில், திருடர்களின் நடமாட்டம் குறித்த காட்சிகள் பதிவாகி இருக்கிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News