செய்திகள்

வீடு புகுந்து 20 பவுன் நகைகள் திருட்டு - போலீசார் விசாரணை

Published On 2019-01-26 18:13 GMT   |   Update On 2019-01-26 18:13 GMT
திருச்சி அருகே வீட்டிற்குள் புகுந்த 20 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
கே.கே.நகர்:

திருச்சி சுப்பிரமணியபுரம் ஹைவேஸ் காலனியை சேர்ந்தவர் ஜார்ஜ் கிரிபெமன்தாஸ். இவர் சம்பவத்தன்று இரவு சாப்பிட்டு முடித்துவிட்டு வீட்டில் குடும்பத்துடன் தூங்கினார். பின்னர் மறுநாள் அதிகாலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் படுக்கை அறையில் வைத்து இருந்த அவருடைய தாயாரின் கைப்பை திருட்டு போய் இருந்தது. அந்த பையில் 20 பவுன் தங்க நகைகள் இருந்தன.

உடனே இது குறித்து அவர் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி வழக்கு பதிவு செய்து, வீட்டுக்குள் புகுந்து கைப்பையில் இருந்த 20 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். 
Tags:    

Similar News