செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
ஆண்டிப்பட்டி அருகே பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள மயிலாடும்பாறை காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கம். இவரது மகள் முகிதா (வயது 14). தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக இவருக்கு வயிற்று வலி இருந்து வந்தது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் வலி குறையவில்லை. இதனால் மனமடைந்த மாணவி தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டிய நிலையில் இருந்தார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.