செய்திகள்

கிருஷ்ணகிரியில் வெவ்வேறு விபத்தில் 2 பேர் பலி

Published On 2019-01-17 14:13 GMT   |   Update On 2019-01-17 14:13 GMT
கிருஷ்ணகிரி பகுதியில் வெவ்வேறு இடத்தில் நடந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி, பழைய பேட்டை நரசிம்மசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் உஸ்மான் செரீப்(55). இவர் 15-ம் தேதி இரவு 9 மணியளவில்ல புதுப்பேட்டை - குப்பம் ரோட்டில் மேல் தெரு பகுதியில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பைக் நிலை தடுமாறி கீழே விழுந்ததுள்ளார். 

இதில் உஸ்மான் செரீப்புக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த டவுன் போலீசார் உஸ்மான் செரீப் உடலைப் பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதேபோல் கர்நாடகா மாநிலம் பெங்களூர், ஜெக்கசந்திரா கோரமங்கலா பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (47). இவர், கடந்த 15-ம் தேதி மாலை 7 மணியளவில், கிருஷ்ணகிரியிலிந்து தர்மபுரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டூர் ஜங்ஷன் அருகே நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே வேகமாக வந்த கார், அவர் மீது மோதியது. 

இதில் பலத்த காயமடைந்த நாகராஜ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News