செய்திகள்
திண்டுக்கல் அருகே வேலி கல்லை அகற்றிய விவசாயி பலி
திண்டுக்கல் அருகே வேலியில் இருந்த கல்லை அகற்றிய போது விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
கொடைரோடு:
திண்டுக்கல் அருகே உள்ள கோடாங்கி நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 50). விவசாயி. இவர் தனது தோட்டத்து பகுதியில் விலங்குகள் உள்ளே வராமல் இருப்பதற்காக கல் ஊன்றி வேலி அமைத்திருந்தார். இன்று காலை அந்த கல்லை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு கல் அவர் மீது சரிந்து விழுந்தது. இதில் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இஸ்மாயில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மனைவி சபுராபீவி அளித்த புகாரின் பேரில் நிலக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.